Header Ads



இரணைதீவில் கொரோனா உடல்களை, அடக்கம் செய்யும் தீர்மானம் கைவிடப்பட்டது..?


கொவிட்19 நோயால் மரணக்கின்றவர்களின் சரீரங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடற்றொழில் அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

இரணைதீவில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு தொழில்நுட்ப குழு அனுமதியளித்திருந்த நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் கடந்த தினம் இது குறித்து கலந்துரையாடியதாகவும் இதன்போது இரணைதீவில் கொவிட்19 சரீரங்களை புதைப்பதற்கான தீர்மானம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.


1 comment:

  1. வடக்கின் இனவாதம் நன்றாக வளர்ந்து வியாபித்து உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.