Header Ads



பொலிஸாரின் தாக்குதல்களிலிருந்து தங்களை, தற்பாதுகாத்துக் கொள்ள மக்களுக்கு அனுமதியுண்டு


பொலிஸாரின் தாக்குதல்களிலிருந்து தங்களை தற்பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு அனுமதியுண்டு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய வகையில் பொலிஸார் தாக்குதல் நடத்தினால் அதனை தவிர்த்துக் கொள்ள தற்பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சாரதி ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயங்களை இன்று காலை தெளிவுபடுத்தியுள்ளார்.

பொலிஸ் சீருடை அணிந்த உத்தியோகத்தர் ஒருவர் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் இவ்வாறு கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்ளும் பொழுது பொதுமகன் ஒருவருக்கு தனது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பதில் தாக்குதல் நடத்த முடியுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அவர் பதிலளிக்கையில்,

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்களை தற்பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு அனுமதியுள்ளது.

நிராயுதபாணியாக நிற்கும் பொதுமக்கள் தங்களது சுகாதாரத்தையும், உயிரையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தற்பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதற்கு அனுமதியுண்டு.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டம் அனைத்து மக்களுக்கும் சமமான அடிப்படையில் அமுல்படுத்தப்படும்.

இலங்கை குற்றவியல் சட்டத்தின் 92 மற்றும் 93 சரத்துக்களின் பிரகாரம் பொலிஸ் உத்தியோகத்தரின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து நிராயுதபாணியாக செயற்படும் போது பொலிஸ் உத்தியோகத்தர் தாக்குதல் நடத்தினால் அப்பொழுது உயிரை பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு பதில் நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.