Header Ads



ஆட்டோக்கள் திருடப்படுகிறது - வாகனங்களை நிறுத்தும்போது அதிக அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தல்


நாட்டில் பல்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில்  முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட, எஹலியகொட, களனி மற்றும் பல்லேகல ஆகிய பகுதிகளில் முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் நான்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, நகரங்களை அண்மித்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தும்போது அதிக அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.