மஞ்சள் இல்லை என்பதால், யாரும் இறந்துவிடவில்லை, சிரமங்களை தாங்க பழக வேண்டும்- பந்துல ஆவேசம்
மஞ்சள் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு யாருக்கும் மஞ்சள் காமாலை இல்லை. அதனால் மஞ்சள் இல்லை என்பதற்காக யாரும் இறக்கவில்லை. மக்கள் இதனுடன் ஓரளவிற்கு வாழப் பழக வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் மஞ்சள் பற்றாக்குறையை தாங்க முடியாதது மக்கள் அல்ல. மோசடி செய்பவர்களுக்கே பிரச்சினை என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் மக்களையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், ஒப்பந்தக்காரர்களை அல்ல, என்றும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது, நம் முன்னோர்கள் எந்த உணவும் இல்லாமல் கிடைப்பதை சாப்பிட்டதாகவும், மக்கள் மிகவும் கடுமையான தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில் சில சிரமங்களை தாங்கிக் கொள்ள பழக வேண்டும் என்றும் கூறினார்.
- IBC -
Post a Comment