Header Ads



உணவு தேடிவந்த 8 அடி நீளம் கொண்ட புலி, வலையில் சிக்கியது - அக்கரபத்தனையில் சம்பவம்

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரபத்தனை போபத்தலாவ மெனிக்பாலம வெஸ்ட்பிரிவு பகுதியில் எட்டு ஆடி நீளம் கொண்ட பாரிய புலி ஒன்று வலையில் சிக்குண்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று (24) இனங்காணபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

மெனிக்பாலம வெஸ்ட் பிரிவில் உள்ள பொதுமக்கலாள் இன்று காலை 07 மணி அளவில் குறித்த புலி வலையில் சிக்குண்டு இருப்பதை இனங்கானப்ட்டதை அடுத்து நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு அதிகாரிகள் குறித்த புலியினை மீட்பதற்காக இரந்தனிகல மிருக வைத்தியசாலையின் வைத்தியர்கள் வரைவழைக்கப்பட்டு இரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

போபத்தலாவ வனப்பகுதியில் இருந்து உணவு தேடிவந்த புலி ஒன்றே இவ்வாறு வலையில் சிக்குண்டதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 

-மலையக நிருபர் சதீஸ்குமார்-

No comments

Powered by Blogger.