Header Ads



பாடாசலை வேனின் கதவு திறந்ததால், கீழேவிழுந்து 5 வயது மாணவன் உயிரிழப்பு


பயணித்துக் கொண்டிருந்த பாடாசலை வேன் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதின் காரணமாக கீழே விழுந்து 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். 

வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.