Header Ads



பசறை விபத்தில் பெற்றோரை இழந்த 3 பிள்ளைகளை பொறுப்பேற்க முன்வந்த Dr வஜிர ராஜபக்ஷ


பசறை-13ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் தமது பெற்றோரை இழந்துள்ள மூன்று குழந்தைகளை பொறுப்பேற்பதற்கு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் Hiru செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த அவர்,

குறித்த குழந்தைகள் தொடர்பில் தகவல் அறிந்த பின்னர் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு வினவியதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து அவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொண்டிருந்தேன்.

குறித்த விபத்தை அடுத்து அந்த குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. 

எனவே, இன பேதமின்றி தாம் குழந்தைகளை பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாக அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் வஜிர ராஜபக்ஷ தெரிவித்தார்.

வைத்தியரின் இந்த கோரிக்கை தொடர்பில் பசறை காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

No comments

Powered by Blogger.