Header Ads



சூட்கேசில் உடல் மீட்பு - 200 க்கும் மேற்பட்டவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு



டாம்வீதியில் சூட்கேசில் பெண்ணிண் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து, அந்த உடலை அடையாளம் காணுமாறு பொலிஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சுமார் 200 க்கும் அதிகமானவர்கள் தொலைபேசி மூலம் தங்களை தொடர்புகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன -வீட்டிலிருந்து வெளியேறி தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறித்து தகவலை கோரி 200க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து கூட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன என தெரிவித்துள்ள டாம்வீதி பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி, சிலர் காணாமல்போனவர்களின் படங்களை அனுப்பிவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.