கொரோனா தடுப்பூசி திருடப்படுகிறதா..? VIP க்களுக்கு திருட்டு வழியில் வழங்கமாட்டோம் என்கிறார் பணிப்பாளர்
கோவிட் - 19 தடுப்பூசி மருந்தை முக்கிய பிரமுகர்களுக்கு திருட்டு வழியில் வழங்க போவதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரமுகர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி மருந்து திருட்டு வழியில் வழங்கப்படுவதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முக்கியத்துவ பட்டியலின் அடிப்படையிலேயே கொரோனா ஊசி மருந்து வழங்கப்படுகிறது.
அரச வைத்தியசாலைகளுக்கு வெளியில் ஊசி மருந்துகள் வழங்கப்படுவதில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி மருந்து திருட்டு வழியில் வழங்கப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment