Header Ads



"ரணில் விக்கிரமசிங்க UNP யின் தலைவராக செயல்படும்வரை கூட்டணி அமைக்க முடியாது"


ஐக்கிய தேசியக் கட்சியுடன், ஐக்கிய மக்கள் சக்தி இணையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு பொதுவான எதிர்க்கட்சிக்கான தளத்தை அமைப்பதில் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக செயல்படும் வரை கூட்டணி அமைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை குறித்த விடயம் அவர்களின் கட்சியின் உள்ளக விடயம், அதற்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

"இது அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பொதுவான அமைப்பை உருவாக்குவதற்கான அழைப்பு மட்டுமே. அதேபோல், நாங்கள் தொடர்ந்து அனைத்து குழுக்களையும் எதிர்க்கட்சியில் ஈடுபடுத்துவோம்.

ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையே எந்த இணைப்பும் இருக்காது.

இருப்பினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.