Header Ads



'பிரதமருடன் எந்தக் கோபமும் இல்லை' - அவர் எனக்குக் கூறியதை நான் எப்படி உங்களுக்குக் கூறுவேன்..?


கொழும்பு-7 இலங்கை மன்றக் கல்லூரி மாவத்தையில், நடைபெற்ற 'made in srilanka' வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  நேற்று முன்தினம் (13) திறந்துவைத்தார். அப்போது, அமைச்சர் வீரவன்சவை அழைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏதோவொன்றை மிக இரகசியமாகக் கூறினார். 

நிகழ்வின் நிறைவில், அமைச்சர் வீரவன்சவைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். 

'அமைச்சரே! பிரதமருடன் இருந்த கோபம் முடிந்து விட்டதா' எனக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த வீரவன்ச, 'பிரதமருடன் எந்தக் கோபமும் இல்லை' என்றார். 'பிரதமர் உங்கள் காதில் என்ன கூறினார்'. என மற்றுமோர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, சிரித்தாவாறே பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச, 'பிரதமர் எனக்குக் கூறியதை, நான் எப்படி உங்களுக்குக் கூறுவேன்' எனக் கேட்டார். 

No comments

Powered by Blogger.