"அரசாங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேறுவது என்பது, சூரியன் மேற்கில் உதிப்பது போன்ற வேலை"
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தமது அணியினர் அரசாங்கத்தில் இருந்து விலகுவது சூரியன் மேற்கில் உதிப்பது போன்றது எனவும்,அப்படியான சம்பவம் நடக்காது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அவரது தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து நாங்கள் வெளியேறுவது என்பது சூரியன் மேற்கில் உதிப்பது போன்ற வேலை. அரசாங்கத்தை காப்பதற்காகவே நாங்கள் ஒன்று கூடினோம்.
தற்போது நாலாபுறமும் சூழ்ச்சிக்காரர்கள். அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கின்றனர் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Only truth came out your mouth
ReplyDeleteநாய் 🐕🐶 எங்கே போனாலும் நக்கி தான் குடிக்கும்
ReplyDeleteநிச்சயமாக சூரியன் ஒருநாள் மேற்கில் உதிக்கத்தான் போகின்றது அப்போது உந்களது எந்த பாவமன்னுப்பும் ஏற்றுக்கொள்ளப்படாது
ReplyDelete