பாகிஸ்தான் வாருமாறு சஜித்திற்கு, அழைப்பு விடுத்தார் இம்ரான் கான்
- அன்ஸிர் -
2 நாட்கள் பயணமாக இலங்கை வந்த, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான சந்திப்பு 24.02.2021 கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது இருவரும் பல, விடயங்கள் குறித்து பேசினர்.
ஒரு கட்டத்தில் சஜித் பிரேமதாசாவை, பாகிஸ்தான் வருமாறு இம்ரான் கான் அழைப்பு விடுத்ததுடன், அங்கு பௌத்த பாரம்பரியங்களை காணுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு பதில் வழங்கிய சஜித் பிரேமதாசா, தமது தந்தையார் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா மற்றும் தமது தங்கை ஆகியோர் பாகிஸ்தான் வந்துள்ளதாகவும், எனினும் தமக்கு அப்போது வரக் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது தந்தை ரணசிங்க பிரேமதாசா, பாகிஸ்தான் சென்றபோது, அந்நாட்டின் உயர் விருதை, அவருக்கு பாகிஸ்தான் வழங்கியதாகவும், இம்ரான்கானிடம் சஜித் பிரேமதாசா சுட்டிகாட்டியுள்ளார்.
இதன்போது இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் Mp மற்றும் கபீர் காசீம் Mp ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.
Post a Comment