Header Ads



விடுதலை செய்யலாம் - சிறையிலிருக்கும் ரஞ்சனிடம் தொலைபேசியில் கூறிய ராஜாங்க அமைச்சர் - அம்பலப்படுத்திய திலிப் Mp


- Twin -அரசாங்கத்தில் இணைந்தால், சிறையிலிருந்து விடுதலை செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹன் ரத்வத்தே, ரஞ்சன் ராமநாயக்கவிடம் இதனைக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாள் இரவு நேரத்தில் மதுபோதையிலிருந்த ராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைபேசியை வழங்குமாறு கூறியுள்ளார்.

அப்போது ரஞ்சனுடன் பேசிய லொஹன் ரத்வத்தே, ரஞ்சனுடன் இருந்த பெண் தற்போது தன்னுடன் இருப்பதாகவும் அரசாங்கத்துடன் இணைந்தால், விடுதலை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கத்துடன் இணைந்து விடுதலையைப் பெற்றுக் கொள்ள ரஞ்சன் ராமநாயக்க தயாராக இல்லை.

அவரை அங்குணுகொல பெலஸ்ஸ சிறையில் கழிவறைகளை கழுவுதல் உட்படத் துப்பரவு பணிகளில் ஈடுபடுத்தி வருவதாக திலிப் வெத ஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.