விசேட மனுவை தாக்கல்செய்த ரஞ்சன்
4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்க விஷேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனக்கு விதிக்கப்பட்ட 04 வருட சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரியே அவர் இந்த விசேட மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன் இந்த மனு விசாரணை செய்து நிறைவடையும் வரை, தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் அவர் மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் திகதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment