Header Ads



வட மாகாணத்தில் பத்திரிகை ஒன்று, பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது - அமைச்சர் கெஹலிய


வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பத்திரிகை ஒன்று பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்குமபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால், சிவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் காலப் பகுதியில் புலனாய்வுத் துறை பலவீனமாக்கப்பட்டதாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நாட்டில் இடம்பெற்றதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தேசியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. தெற்கில் இனவாதத்தை ஊக்குவிக்கும் ஊடகங்கள் பற்றி அக்கறை இல்லையோ? அதுவும் பயங்கரவாதமே.

    ReplyDelete
  2. why are going to the northern newspaper while your parliament being in foremost and frontier in this cheapest matter???

    ReplyDelete

Powered by Blogger.