இம்ரானை வரவேற்கும் ஒத்திகை - துப்பாக்கி ரவைகளுடன் பொலிஸ் அதிகாரி கைது
- Nirosh - தமிழ் மிரர் -
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வரவேற்பதற்கான ஒத்திகை நிகழ்வுகள் நேற்று (19) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, டி-56 ரக துப்பாக்கி ரவைகளை விமான நிலையத்தினுள் எடுத்துச் செல்ல முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளப் பொலிஸ் அதிகாரி, மார்ச் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ன ஆபத்து நிறைந்த நாடாக இந்த நாடு மாறியிருக்கிறது. இனவாதத் தீயை ஊதிப்பெருக்கவைத்தால் அது கட்டுக்கடங்காமல் போய் விடும் பிறகு ஊதியவர்களாலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழர்கள் போராட்டம் ஷஹ்ரான் வெடிப்பு என்பனவும் இதனை ஒத்து உருவானவையே.
ReplyDelete