வாக்களிப்பதை தடுத்த சஹ்ரான் குழு - வாக்களிக்காதவர்களுக்கு அபராதம், பல்டிக்கு தடை விதிக்கவும் பரிந்துரை
'வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்' என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இத்தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர், வாக்களிப்புகளில் ஈடுபடவில்லையென சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இலங்கையின் தேர்தல் முறைமை குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ள ஆணைக்குழுஇ தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று அவசியம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பலவீனமான அரசாங்கம் ஒன்று காணப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தாக்குதல்களை நடத்தலாம் என, சஹ்ரானின் குழு எண்ணியதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், வேறொரு கட்சியுடன் இணைவதைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளை, ஒன்றிணைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறுபான்மையினக் குழுக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment