Header Ads



பயங்கரவாதி சஹ்ரானின் முதல், இலக்கு கண்டி பெரஹராவாகும் - அந்தத் திட்டம் தவறிவிட்டது


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் ஆவார். அவருடைய முதலாவது திட்டம் தவறிவிட்டது என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவிக்கையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

அவரது முதலாவது இலக்கு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற ​எசல பெரஹராவாகும். அந்த பெரஹா மீ​தே, தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் முதலாவதாக  திட்டமிட்டிருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகையில் வெடி​ப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சம்பவத்துடன் சஹ்ரானுக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது என அவ்வறிக்கையில் ​மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Tavari vittathaa illa tavara vidappattatha??? why they did in churches only? May be their are no Singhala Buddist people?...There are lots of doubts to be answered...but

    ReplyDelete
  2. கதைகள் புனையப்படும் போது ஒவ்வொரு உதாரணங்களும் வரும், போகும்,இடையில் நிற்கும், தொடரும், அதன் கதைவசனங்களும், நபர்களும் அவ்வப்போது வேறுபடும். ஆனால்,இவர்களின் இலக்ைக அடைவதற்கு சாத்தியமான ஒவ்வொன்றும் அவ்வப்போது வரும் போகும். அவை ஹொலிவூட் படங்களின் கதை வசனங்கள் போல.

    ReplyDelete

Powered by Blogger.