Header Ads



இலங்கை இணையத்தளங்கள் மீது ஊடுறுவித் தாக்குதல்


டொட்.எல்.கே. டொமேன் என்ற பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையத்தளங்கள் மீது இணைய ஊடுறுவிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கணனி அவசர பதில் நடவடிக்கைகான ஒன்றியத்துடன் இணைந்து அதற்கான காரணம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் விசேட தினங்களை இலக்கு வைத்து இவ்வாறு இணைய ஊடுறுவிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக கணனி அவசர பதில் நடவடிக்கைகான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தை இலக்கு வைத்து இந்த இணைய ஊடுறுவல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் வேதனத்தை பெற்றுத்தருமாறு என்ற காட்சிப்படம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் அதனை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கணனி அவசர பதில் நடவடிக்கைகான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.