Header Ads



கொரோனா தொற்றிய 4554 பேருக்கு என்ன நடந்தது..?


கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டிருந்த சுமார் 4500 பேரின் விபரங்கள் விடுபட்டிருப்பதாக இரசாயன பகுப்பாய்வு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளுக்கு அமைய, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக கொவிட் நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 728 ஆகும்.

நேற்று வரையில் இரண்டாம் அலையினால் கொவிட் நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அப்படியானால் 4554 பேருக்கு என்னானது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.