Header Ads



தொழில் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடிய 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்


களனி கங்கையில் குளிப்பதற்காக சென்ற 4 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் மாலை களனி கங்கையின் நவகமுவ, மாபிட்டிகம பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர்களில் ஒருவர் தொழிலுக்கான நேர்முக தேர்வில் தெரிவாகியதனை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் களனி கங்கை பாலத்திற்கு அருகில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்துள்ளார்.

அதன் பின்னர் இளைஞர்கள் குளிப்பதற்கு சென்ற போது இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளளனர்.

இரண்டு நண்பர்கள் நீரில் மூழ்கும் போது மற்றைய இரண்டு நண்பர்கள் களனி கங்கைக்கு அருகில் உறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 27 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.