ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயங்கள் இன்று (26) திறந்திருக்கும்
- JF காமிலா பேகம் -
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் , தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கப்பெறாத மாணவர்களின் வசதி கருதி , ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான காரியாலயங்கள் இன்று (26) திறந்திருக்கும்.
இதன்படி பிரதான அழுவலகங்களான காலி, குருணாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள காரியாலயங்கள் இன்று காலை 8.30முதல் பகல் 1மணிவரை திறந்திருக்கும்.
இதற்கமைய பரீசைக்குத் தோற்றும் அடையாள அட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் அல்லது கிராமசேவையாளரினால் உறுதிப்படுத்ததப்பபட்ட, அடையாள அட்டை விண்ணப்பங்களுடன் வருகை தருமாறு, திணைக்களத்தினால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Post a Comment