தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து, நானும் விரக்தியடைந்துள்ளேன் - அமைச்சர் டலஸ்
பொதுமக்களை போல நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து நானும் விரக்தியடைந்துள்ளேன் என அமைச்சர் டலஸ்அலகபெரும தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை தற்போதைய அரசாங்கம் கையாளும் விதத்திற்காக பலர் அரசாங்கத்தினை விமர்சிக்கின்றனர் என அமைச்சர் திக்வெலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும் முன்னொருபோதும காணப்படாத நெருக்கடி காணப்படும் இந்த தருணத்தில் அரசாங்கம் பொருளாதாரத்தையும் ஏனைய வளங்களையும் நிர்வகிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதை பொதுமக்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த தருணத்திலிருந்து கொரோனாவைரசினால் ஏற்பட்ட விளைவுகளை கையாளவேண்டிய நிலையில் உள்ளது கடந்த 166 நாட்களாக அரசாங்கம் கொரோனா வைரசினை கையாளவேண்டிய நிலையிலுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment