Header Ads



மனித இரட்சகனின் மா நீதிமன்றில் முறையிடுவோம், அழகிய பொறுமைக்குள் அடைக்கலம் புகுவோம்


'கொவிட்' -

உடலங்கள் தொடர்பில் 

முஸ்லிம் உலகென்ன

முழு உலகும்

கதைத்தாலென்ன

பதைத்தாலென்ன

'புதைத்தால் -

நிலத்தடிநீர்

மாசுபடும்;' என்னும்

அஞ்ஞானத்தில்

இத்தால்- 

விஞ்ஞானம் 

வீழ்ந்துவிட்டது!

ஆதலால்,

எரிக்காதே

என்றுநாம்

எதிர்க்குரல் கொடுத்தோ

அடக்கவுரிமைக்காய்

கோரிக்கைவிடுத்தோ

அழுதுபுலம்பி

ஆர்ப்பாட்டமெடுத்தோ

ஆவது

நல்லடக்கமா?

அது-

நடக்குமா?!!


எனவே,

மாற்றுவழியாகத் 

தீர்வைத்தேடி

அபாயமல்லாத

உபாயப் பாதையில்

பாதம் பதிப்போம்!

எச்சரிக்கின்றேன்...

எங்கெவரும் - 

வீழ்ந்துவிடாதீர்கள்!

வீழ்த்துவதற்கென 

விரிந்துகிடக்கும்

சதிகாரர்களின்

சதிமான வலையில்...!

'ஏன் எரிக்கிறார்கள்'?

இதில் -

சரியான

புரிதலோடு

சன்மார்க்கவியல்

அரசியல்

அறிவியலென வுள்ள

பல்துறைகளின் 

தலைமைகள்

நிலைமைக்கேற்ப

கூட்டாக 

அமர்ந்து ஆலோசித்து

அடைவை நோக்கி

சமூகம் 

நடக்கவும் கடக்கவும் வேண்டிய

அடுத்த கட்டத்தை

அடுத்தடுத்து

எடுத்துக்காட்ட வேண்டும்!

அதற்குள்-

'முஸ்லிம்' என்று

வெறும் 'ளேபலில்' நில்லாது

எல்லோரும்

'ஒரிஜினலாய்

எம்மை நாம் ஒழுங்கமைப்போம்!

பின்பு –

மனித இரட்சகனின் 

மாநீதி மன்றில்

முறையிடுவோம்!

அத்தோடு

அழகிய பொறுமைக்குள்

அடைக்கலம் புகுவோம்!!

- மூதூர் முறாசில் -

2 comments:

  1. True, will wait for the TRUE JUDGMENT DAY of ONE TRUE GOD all human being.
    No culprit will escape, no racist will enjoy on that day.

    True Judgement will prevail on that day.

    That Judgement Day is not only for Muslims But for all human on earth. So no wrongdoers will be free on that day.

    Hasbiyaallahu Wannihmal Wakeel.

    ReplyDelete
  2. மையத்தை அடக்கினால் மட்டுமே நிலத்தடி நீர் மாசுபடும் ஆனால் கொறனா வைத்தியசாலையில் இருந்து செல்லும் கழிவுகளில் இருந்து நிலத்தடி நீர் மாசுபடாது
    இது விஞ்ஞானம் இல்ல கஞ்ஞானம்

    ReplyDelete

Powered by Blogger.