Header Ads



எதிர்வரும் மார்ச்சில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி வழங்க முடியும்: Dr சுதர்ஷனி


எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் வாரத்திற்குள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க முடியும் என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உறுதியளித்தார்.

கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

இரண்டாவது தடுப்பூசியை எதிர்வரும் 4 வாரங்களுக்குள் சுகாதார தரப்பினருக்கும், முப்படையினருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வெகுவிரைவில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மார்ச் முதல் வாரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். பக்கவிளைவுகள் ஏற்படுமாயின், அதற்காக சிகிச்சை வழங்கவும் சுகாதார தரப்பினர் தயாராகவுள்ளனர். அதன் பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகள் தொடர்பாக பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்

No comments

Powered by Blogger.