Header Ads



கொரோனா மரணங்கள் 305 ஆக உயர்ந்தது - இன்றும் 8 பேர் உயிரிழப்பு


இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றறைய தினம் இதுவரையில் 859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.