O/L பரீட்சை திட்டமிட்டவாறு நடக்காது - பீரிஸ்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சைகளை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தினத்தில் நடத்த முடியாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (01) உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
எனினும், சுமார் 6 வாரங்களுக்கு முன்னதாக, பரீட்சையை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நாட்டில் காணப்படும் சுகாதார நிலைமை குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, தற்போதைய நிலையில், மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு விரைவில் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படின்னா school நடாத்த எடுத்த முடிவு மொக்குத்தனமானதா?
ReplyDeleteநம்ம பீரிஸ விட்டாலும் கபில சேர் புத்திசாலியாச்சே.
என்ன நடந்திருக்கும்.