Header Ads



பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவினர் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை


அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவினர் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 44 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில், முஜிபூர் ரஹ்மான் எம்.பியின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.