Header Ads



ஜனாஸாக்கள் பல எரிக்கப்படவில்லை - பிரேத அறைகளில் காத்திருப்பு


கொரோனா தொற்றினால் மரணித்ததாக, சுகாதார அமைச்சினால் கூறப்படும் முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள் பல, இதுவரை எரிக்கப்படாமலே பிரேத அறைகளில், வைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

தமது உறவுகளின் உடல்களை எரிப்பதற்காக, தம்மால் பெட்டி வழங்க முடியாது, பெட்டியை வாங்குவதற்காக பணமும் வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்களில் பலர் உள்ளதால், பிரேத அறைகளில் பல ஜனாஸாக்கள் அப்படியே உள்ளன எனவும் அறிய வருகிறது.

அதன்படி பொலிசாரின் பிரேத அறையில் மாத்திரம் 7 ஜனாஸாக்கள் வைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்

இவற்றுக்கு மேதிகமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் இடங்களிலும் இவ்வாறு ஜனாஸாக்கள், எரிக்கப்படாமல் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.


1 comment:

Powered by Blogger.