Header Ads



கிறிஸ்தவ தேவாலயங்களில், பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு

நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள், உதவி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

நத்தார் தேவ ஆராதணைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.