Header Ads



மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேருககு கொரோனா


மேல் மாகாணத்தில் இருந்து வௌி மாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. 

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபர்வர்களை எழுமாற்றாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.