Header Ads



கொரோனா ஒழிப்புக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 37 மருந்து வகைகள் - இராஜாங்க அமைச்சர்


கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 37 மருந்து வகைகளின் தரம் தொடர்பில் ஆராய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, உள்நாட்டு வைத்திய தேசிய சபை மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஆகியவற்றுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த மருந்து வகைகளின் நோய் எதிர்ப்புத் தரத்தின் சாதக தன்மை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர் இந்த நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி, இந்த மருந்து வகைகளின் தரம் தொடர்பில் ஆராய உணவு ஓளடத ஆயுர்வேத திணைக்களம் மற்றும் உள்நாட்டு வைத்திய தேசிய சபை ஆகியன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இந்த மருந்து வகைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 comment:

Powered by Blogger.