Header Ads



கொரோனா 2 ஆவது அலையில், உயிரிழந்தோரின் வயதெல்லைகள் வெளியானது


இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதலாவது அலையில் 13 பேரும், கொவிட் இரண்டாவது அலையில் 117 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது அலையில் உயிரிழந்தோரின் வயதெல்லை தொடர்பிலான தகவல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

வயதெல்லை உயிரிழப்பு

10 – 30 3 (2.56%)

31 – 40 4 ( 3.41% )

41 – 50 13 ( 11.11% )

51 -60 18 (15.38% )

61 – 70 23 ( 19.65% )

71 Above 56 ( 47.86% )

10 முதல் 30 வரையான வயதெல்லையை கொண்ட 3 பேரும்,

31 முதல் 40 வரையான வயதெல்லையை கொண்ட 4 பேரும்,

41 முதல் 50 வரையான வயதெல்லையை கொண்ட 13 பேரும்,

51 முதல் 60 வரையான வயதெல்லையை கொண்ட 18 பேரும்,

61 முதல் 70 வரையான வயதெல்லையை கொண்ட 23 பேரும்

71 வயதை தாண்டிய 56 பேரும் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்துள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.