Header Ads



கொரோனா மரணங்களில் 142, 141 ஆவது சிக்கலானது


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, மரணமடைந்தோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது. அதில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்த ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 62 வயதானவர், டிசெம்பர் 7ஆம் திகதி மரணமடைந்தார்.

கொவிட்-19 நிமோனியா காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் 141ஆக பதிவாகியுள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்து. 

எனினும், அவருடைய வதிவிடம் சரியாக கண்டறியப்படவில்லை என, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், 142ஆவது நபர், கொழும்பு ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்தவர் ஆவார். 77 வயதான அவரும் ஹோமாகம வைத்தியசாலையிலேயே மரணமடைந்துள்ளார். கொவிட்-19 மற்றும் நீரிழிவுடன் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமை காரணமாகவே, அவர் மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.