Header Ads



அக்கரைப்பற்றை முடக்குவது குறித்து ஆராய்வு


அக்கரைப்பற்றில் பத்துப்பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் அக்கரைப்பற்றுச் சந்தையில் உள்ள 20 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்ததனையடுத்து,இதில் பத்துப்பேருக்கு கொரோனா பொசிட்டிவ் எனமுடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றன. இதையடுத்து,ஜனாதிபதி செயலகத்துக்கு குறித்து தகவல் அறிவிக்கப்படுள்ளது.

இதைத் தொடர்ந்து அக்கரைப்பற்று நகரை முடக்கம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டொக்டர் பறூஸா நக்பர் தெரிவித்தார்.   


No comments

Powered by Blogger.