Header Ads



"முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள்''- நூல் வெளிவர உள்ளது

எதிர்வரும் வருடம்   'முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள்'  எனும் நூல்  வெளிவர உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் தங்களது உறவினர்கள் (மரணித்தவர்களாகவும் இருக்கலாம் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கலாம்) வைத்தியர், சட்டத்தரணி, அதிபர், பொறியியலாளர் போன்ற  பதவி வகித்தவர்களுடையதும், சமூக சேவையாளர்களினதும் விபரங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களையும், விபரங்களையும் 0776421646 என்ற வட்சப் இலக்கத்திற்கு அனுப்ப முடியும்.

நூலை தொகுக்கும் முயற்சியில் பரீட் இக்பால் ஈடுபட்டுள்ளார்.

'முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள்' நூலுக்கு ஆலோசகர்களாக  ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.எம்.முஹ்தார், முன்னாள் யாழ் ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் ஏ.சி. நஜ்முத்தீன்,  பட்டயக் கணக்காளர் எம்.எஸ்.எம்.ஜான்ஸின்     கொழும்பு ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் யாழ் அஸீம்  ஆகியோர் செயற்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.