Header Ads



முதற்கண் அல்லாஹ்வுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன் - 199 புள்ளிகளை பெற்ற அர்ஷத் செய்னா

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் மொழி மூலத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவி அர்ஷத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் 199 புள்ளிகளைப் பெற்றதையிட்டு அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அடுத்து எனது தாயார் மற்றும் தகப்பன். அத்துடன் பாடசாலை அதிபர் வகுப்பாசிரியர் மற்றும் எனக்கு முன்பள்ளி முதல் இன்று வரை கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். 

ஆரம்ப வகுப்புகளில் இருந்தே இது போன்ற பெறுபேற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணம் கொண்டு படித்தேன். தினமும் படித்ததை மீட்டுவதும் கற்றலில் விட்ட பிழைகளை திருத்திக் கொள்வதும் என் வழமையாக இருந்தது. கடுமையாக கஷ்டப்பட்டு முயற்சித்ததால் இந்த அடைவை பெற முடிந்தது. என் போன்ற மாணவர்களுக்கும் எனது அன்பான அறிவுரை இதுவேயாகும். நன்றி.

_ Muhsi-

No comments

Powered by Blogger.