Header Ads



தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளேன் - நவீன் அறிவிப்பு


ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இன்று அறிவித்துள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடிவு செய்துள்ளதால், தான் முன் வந்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழுவால் மட்டுமே தீர்மானிக்க முடியாது என்று கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டு புதிய தலைவரை நியமிக்க முற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்று தோல்வியை தழுவிக்கொண்டது. இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்திருந்தார்.

கடந்த மாதம் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய துணைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு விஜேவர்தன மற்றும் ரவி கருணநாயக்க ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு இரகசிய வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ருவான் விஜேவர்தன புதிய துணைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.