Header Ads



பிரன்டிக்ஸ் நிறுவனத்திற்கு சவால், விடுத்துள்ள லக்ஸ்மன் கிரியல்ல


இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விபரங்களை பிரன்டிக்ஸ் நிறுவனம் வெளியிடவேண்டும் என எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்தியாவிலிருந்து செப்டம்பர் 22 ம் திகதி அழைத்துவரப்பட்டவர்களின் விபரங்களையும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் குறித்த விபரங்களையும் பகிரங்கப்படுத்தவேண்டும் என எதிர்கட்சி நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளது.


எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


பிரென்டிக்ஸ் தெரிவிப்பது உண்மையென்றால் அவர்களை விபரங்களை வெளியிடுமாறு சவால் விடுக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.