Header Ads



இலங்கையில் தங்கியுள்ள சகல வெளிநாட்டவர்களினதும், விசா காலம் டிசம்பர் 5 வரை நீடிப்பு


இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வௌிநாட்டவர்களினதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 60 நாட்களினால் நீடிக்கப்பட்டுள்ளது.

விசாக் கட்டணம் மற்றும் விசாவை பெறுவதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசாவினைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுக்கு சமூகமளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

எந்தவொரு வௌிநாட்டவரும் டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வௌியேறினால், விமான நிலையத்தில் விசாவுக்கான கட்டணத்தை தண்டப்பணமின்றி செலுத்த வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.