கெனிஹிமுல்ல, பெரலாந்தவத்த, ஹெலகந்தன ஆகிய 3 கிராமங்கள் முடக்கப்பட்டன
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெனிஹிமுல்ல, பெரலாந்தவத்த மற்றும் ஹெலகந்தன ஆகிய கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இன்று (15) காலை முதல் மேற்குறித்த கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் ஊழியயர்கள் பெருமளவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை அடுத்து அந்த தொழிலாளர்களுடன் நெருங்கி பழகியவர்களும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் உள்ள 500 பேருக்கு இன்று பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
Post a Comment