இன்று மாத்திரம் 276 பேருக்கு கொரொனா தொற்று
இலங்கையில் மேலும் 75 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய -24- தினத்தில் மாத்திரம் 276 கொரொனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3958 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment