எம்.ஐ.எம்.அமீன், எம்.ஏ.கரீம் ஆகியோருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம்
1979 இல் ஆரம்ப நிலை விரிவுரையாளராக பேராதனைப் பல்கலைக்கழக்கத்தில் இணைந்து கொண்ட எம்.ஐ.எம்.அமீன், அரபு இஸ்லாமியக் கற்கைத் துறையின் விரிவுரையாளராக நியமனம் பெற்று ஓரிரு வருடங்களிலேயே (1981) இத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 28 வருடப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியின் பின்னர் 2004 இல் ஓய்வுபெற்ற இவர் தனது துறைசார்ந்து 22 நூல்களை வெளியிட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத்துறைத் தலைவராகக் கடமையாற்றிய பேராசிரியர் எம்.ஏ.கரீம், சுவீடனின் சாமர்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும், மலேஷியாவின் மலாயா பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாற்றியுள்ளார். மலேஷியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு உட்பட பல சர்வதேச மாநாடுகளிலும் பங்குகொண்டுள்ளதோடு பௌதீகவியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்துள்ளார்.
Post a Comment