Header Ads



பல்கலைக்கழக மாணவியை கடத்த முயற்சி - சந்தேகநபர் கைது


களனி பல்கலைக்கழக மாணவியொருவரை பலவந்தமாக காரொன்றில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் நேற்று (6) கைதுசெய்யப்பட்டுள்ளார்.


மாணவிளை கடத்திச் செல்ல பயன்படுத்திய கார் வத்தளை- அல்விஸ் டவுன் பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


சனிக்கிழமை 5ஆம் திகதி மாலை பல்கலைக்கழக வீதியில்  விடுதியை நோக்கி, இந்த மாணவி நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, நபரொருவரால் காரொன்றில் பலவந்தமாக கடத்த முற்பட்டுள்ளார். இதன்போது  மாணவி கூச்சலிட்டதையடுத்து, காருடன் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.


இந்தச்  சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பல்கலைக்கழக வளாகம் அதனை அண்மித்த பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவின் உதவியுடன் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய சந்தேகநபரும் அவர் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.