106 கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை - கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு
106 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன்னகத்தே வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றங்கள் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் இன்று (24) அழைக்கப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பிரதிவாதி 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி புறக்கோட்டை பிரதேசத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment