Header Ads



அலி சப்ரிக்கு, முஜிபுர் ரஹ்மான் சவால்


இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உண்மையான நோக்கம் காணப்படுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நீதி அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.


"மதுமாத அரவிந்த கடந்த காலங்களில் பல இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார், இனவாத கருத்துக்களை மாத்திரமல்ல கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வன்முறையை தூண்டும் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்.


நீதி அமைச்சர் இப்போது அவருக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் சட்டத்தை செயல்படுத்த முடியும்" என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் இனவாதத்தை தூண்டியதாக நீதி அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. வீணான வாக்குவாதங்களையும் சச்சரவுக்குரிய விதமாகப் பேசுவதையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்டுவிட்டு நாட்டிற்கும் சமூகத்திற்கும் என்ன செய்தால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமோ அதனைச் செய்ய தயவுசெய்து முயலுங்கள்.

    ReplyDelete
  2. Tamil
    Mr. M.I.Y Suhood has made a very valuable and wise advice to Mujeebu Rahuman and all other Muslim MP's. If Mujeebu Rahuman follows this, there will be very very much less problems will happen to the Muslims, Insha Allah.

    திரு M.I.Y சுஹூத் முஜீபு ராகுமான் மற்றும் பிற முஸ்லீம் எம்.பி.க்களுக்கு மிகவும் மதிப்புமிக்க மற்றும் புத்திசாலித்தனமான ஆலோசனையை வழங்கியுள்ளார். முஜீபு ராகுமான் இதைப் பின்பற்றினால், முஸ்லிம்களுக்கு மிகக் குறைவான பிரச்சினைகள் ஏற்படும், இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart & Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. இந்த மடையனுகளை பாராளமன்றம் அனுப்பினால் இவனுகளின் நலன்களுக்காக எப்படியெல்லாம் பேசி குழப்பி விடுவானுகள் hello முஜீப் ஏன் உங்கட அரசாங்கம் இருந்த காலத்தில் நடந்தவைகளை இன்னும் நஷ்ட ஈடே கிடைக்கவில்லை அது தெரியுமா? 1983 இல் எங்கட கடை எரிக்கப்பட்டு பல முறை ரெபியா சென்றும் இது வரை எதுவும் கிடைக்காதவர்களில் நாமும் இருக்கிறோம் (ரவூப் ஹக்கீம் தான் பொறுப்பில் இருந்தார் )
    suhood MIY அவர்களே உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்

    ReplyDelete
  4. Mr Mujibur Rahuman, you should also know that your colleague Champika Ranawaka has written books against Muslims. So for now don't dig the past.

    ReplyDelete
  5. இவர்கள் விட்ட சவால்களால்தான் அவர்கள் ஒன்று பட்டது தெறியாதா

    ReplyDelete

  6. Mr.Mujeeb Stop nonsense/Drama and do something good for All society... For SriLankans.

    ReplyDelete

Powered by Blogger.