Header Ads



68 வயதில் 6 மாதத்திற்குள் 6 புத்தகங்களை எழுதி சாதனை


பன்னூலாசிரியரான அக்கரைப்பற்று MIF மதீனா உம்மாஹ் ஒய்வு பெற்ற ஆசிரியை  கடந்த ஆண்டும் கனவு மகன் என்ற நூலை எழுதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது கடந்தஆண்டும்  6 மாதங்களில் 6 புத்தங்களை எழுதி அனைவரயும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றார் 


தனது 68 வயதில் இந்த சாதனையை செய்திருப்பது எல்லோரினதும் புருவங்களையும் உயர்த்தி வியப்பாக பார்க்க வைத்திருகின்றது என்றால் அது மிகையாகாது.


இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக  இயங்கக் கூடிய ஒருவர் அதனால்தான் இந்த சாதனையை நேர்த்தியாக செய்து முடிக்க முடிந்திருக்கின்றது.


கொரோனா கால விடுமுறையை வினைத்திறனான கழித்திருக்கின்றார் என்பது மற்றுமொரு சிறப்பம்சம் .


ஆறு புத்தகங்களின் வெளியீட்டு விழா நாளை மறு தினம் அக்கரைப்பற்று மாநகர  சபை ஹல்லாஜ் அரங்கில் காலை 9 மணிக்கு  நடை பெறவுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி 


உங்கள் எழுத்து பணி தொடர எமது வாழ்த்துக்கள்


எம் வை இர்பான்  

No comments

Powered by Blogger.