Header Ads



மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 349 இலங்கையர்கள், இன்று நாட்டை வந்தடைந்தனர்


மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த 349 இலங்கையர்கள் இன்று (1) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய டுபாயிலிருந்து 335 இலங்கையர்களும் டோஹாவிலிருந்து 14 இலங்கையர்களும் நாட்டை வந்துள்ளனரென விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இ​தேவேளை, நேற்று மாலை 6.30 மணியளவில்,  சீனாவின் ஷங்காய் விமான நிலையத்திலிருந்து,  இலங்கையின் முதலீட்டு திட்டத்தில் கடமையாற்றும் 29 சீனர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கையை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன்,இவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.