Header Ads



179 கூட்டங்களில் பங்கேற்று, இம்தியாஸ் சாதனை

முன்னாள் அமைச்சரும்,  ஐக்கிய மக்கள் சக்தி  தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ளவருமான  இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார், இம்முறை 179 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று, சாதனை படைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பேச்சாளராக செயற்பட்ட இம்தியாஸ், குறிப்பிடத்தக்க சில மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கவில்லை.

குறிப்பாக வடக்கு மாகாணம் மற்றும் அம்பாறை, திருகோணமலை, ஹம்பாந்தோட்ட மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் பங்கேற்கவில்லை.

இருந்தபோதும் குறுகிய காலத்தில் அவர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இவ்வாறு 179 பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இம்தியாசுக்கு அழைப்புக்கள் வந்தபோதும், நேரமின்மை காரணமாக அவரினால் அந்த அரசியல் பிரச்சாரக்  கூட்டங்களில் பங்கேற்க, முடியாமல் போனமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. PALAVARUDA KAALAMAAKA, AMAICHARAAKA
    IRUNDU, MAKKALUKKO, URUKKO,
    ENDAVITHAMAANA SHEVAIKALUM SHEIYATHA
    IVAR,
    PADAITHIRUKKU SHAATHANAI ENNA
    ENRU PAARUNGAL.
    SHIII VETKAMAAA ILLA????

    ReplyDelete

Powered by Blogger.